Tuesday, 4 March 2014


புறிகிறதா தாய்மனசு?

எதிர் காலம் என்று உன்னை
இதயம் சுமந்தேன் கண்ணே
கனவே மகனே என் மகனே!

உன்னை ஈன்றிடும் போது—கொண்ட
உவகையில் நான் உயிர்த்து.
உலகில் வாழ்கிறேன் என் உறவே!
நான் வாழ்வதன் அர்த்தமே!
நீ வாழ்வதைக் காண்பதே.
.(எதிர்)
காலம் கைகூட நாலும் நீ தேட
வளரும் கல்வி பெறவே
நாளும் நானும் உயிர்க்கிறேன்  
கேளு அன்பு மகனே!

தாயின் மனம் போலும் நின்று வாழ
சேயின் வளம்காண என் நாளில்
நான் உன் நலம் நோக்கி இருக் கிறேன்
வாழ்வும் இனிநீயே மகனே!
கெடும் குடி காரன் ஆக மாறி\
படு வதுமேன் கூறு மகனே!
.(எதிர்)
உயிரின் உயிராக உனையே நினைவாக
உணரந்தேன் நானும் பாவி`
பிறப்பின் பயனாக வாழ்வின் சுகமாக
தொடர்ந்தேன் நானும் உயிரே!
பாவம் நினைக்காத அன்னை மனமே
பார்த்துத் துடிக்கிறேன் தினமே.
ஆடிக் கிடந்தாலும் பிள்ளை தானென
அதுவாய் அழுகுது தேடியே!
அன்பு மகனே ஆசை வரமே
அழிக்கும் குடியும் ஏனடா?


கொ.பெ.பி.அய்யா.



Saturday, 1 March 2014

பாவக்கணக்கு.

நான் சொல்லியழுதிடாத சொந்தக் கதை கேளு
நான் எண்ணி உறங்கிடாத அந்தக் கதை கேளு-இங்க
சொந்தமென்ன பந்தமென்ன ஒண்ணுமில்லையே
என் தாயே தெய்வமே!—அவள்
சொன்னாள் கேக்கலயே!

அத எழுத்தாலே சொல்லி அழுதா
அந்த எழுத்துக்கும் உயிர் வருமே!
ஒரு பாட்டாலே எழுதிப் படிச்சா
அடப் பாட்டுங் கூடக் கூடி அழுமே!!
அந்தப் பாவம் மறக்க நான் பாட்டுப் படிக்க
எந்தப் பாவி மனசும் நொந்து துடிக்கும்.
இதக் கேட்டுத் திருந்த ஒரு ஆளு இருந்தா
செஞ்ச பாவம் தீரும் எனக்கு.
தாயி சொல்லத் தூக்கி எறிஞ்சேன்
அய்யோ குடியாலே கெட்டு அழிஞ்சேன்

நான் ஆகாரம் இல்லா அங்கே போற நேரம்`
நான் ஊரோடும் சேர உறவு ரொம்பத் தூரம்.
என் உடம்பக்கூட தூக்கிச் சுமக்க ஊக்கமில்லையே.
அப்போத் திமிரு கேளாது.
இப்போ அழுதாத் தீராது

தரையில நான் படுத்திருந்தா தாய் மனசு கேளாது
தலையணயும் மறந்திருந்தா தன்மடியத் தந்திடுவாள்.
உண்ணாமப் படுத்துவிட்டா ஊட்டிவிட்டு தூங்கவப்பாள்.
இந்தப் பாவியால அந்தத் தாயுந்தான்
என்ன விட்டுந்தான்  போய் மறஞ்சாளே!
நான் தின்னாத பண்டமும் இல்ல
நான் பண்ணாத சேட்டையும் இல்ல
நான் போடாத சட்டையும் இல்ல
நான் ஆடாத ஆட்டமும் இல்ல
சேறு தண்ணி இப்போ மெத்தை இருக்கு
நாறத் தண்ணி இப்போ சோறு எனக்கு.
பேரு தொலஞ்ச குடிகாரன் எனக்கு.
அந்தத் தேரு ஏறவும் என்ன இருக்கு.
நான் பாடுகிறேன் பாட்டு உனக்கு
சாமி குடிக்காதே நானே கணக்கு.

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 25 February 2014




குடிக்காதே தம்பி குடிக்காதே !!

குடிக்காதே தம்பி குடிக்காதே
குடிக்காதே தம்பி குடிக்காதே
அடிமைத் தனமாய் மயங்கிவிடாதே 
குடும்பம் இருக்கு மறந்துவிடாதே!  (குடிக்காதே)

பாட்டிலைப் பாரு எழுத்தும் பாரு
பழகும் போததைப் படிச்சுக்கோ—குடிக்கப்
பழகும் போததைப் படிச்சுக்கோ
குடியே குடியைக் கெடுக்கும் என்று
கூறும் வரிகளைப் புரிஞ்சுக்கோ
குடியே குடியைக் கெடுக்கும் என்று
கூறும் வரிகளைப் புரிஞ்சுக்கோ  (குடிக்காதே)

வட்டம்போட்டு கெடுக்குற கூட்டம்
திட்டம் போட்டு வளையுது
வட்டம்போட்டு கெடுக்குற கூட்டம்
திட்டம் போட்டு வளையுது`--உன்னை
கட்டம் கட்டி இழுக்குற கூட்டம்
மட்டம் போட்டே அலையுது `--உன்னை
கட்டம் கட்டி இழுக்குற கூட்டம்
மட்டம் போட்டே அலையுது
நினைத்து உனையும் உணராவிட்டால்
நீசரைநீ தப்ப முடியாது.
குடிப்பவன் தானே திருந்தாவிட்டால்
குடியை ஒழிக்க முடியாது. (குடிக்காதே)

கெடுக்குற காலம் கலிகாலம்—இனி
தடுக்குற முயற்சி இருக்காது.—குடி
தடுக்குற ஆட்சி வாராது.
குடிக்கத் தடையும் சட்டம் போட்டா
குக்டிக்கத் தடையும் சட்டம் போட்டா
வடிக்கிற தொழிலும் உருவாகும்—அதை 
தடுக்குற படையே வளமாகும்.
குடிக்கிற பழக்கம் மறந்து போயிட்டா
குடிக்கிற பழக்கம் மறந்து போயிட்டா
கெடுக்குற குடியும் இருக்காது. (குடிக்காதே)



கொ.பெ.பி.அய்யா.


Tuesday, 18 February 2014

வேறு வழி சிந்திப்பீர்

வேசி போலே போதையோ
காசை யெல்லாம்  பறிக்குது.
கடனாளி ஆக்குது.
உறவுகளை  அழிக்குது.
வேண்டாம் அந்தக் குடிப்பழக்கம்
விட்டு விடு தோழனே

தாய்க்குலத்தின் வேதனை
தமிழரசு யோசிப்பீர்..
ஒழித்திடுங்கள் மதுவினை
உளமாற  வாழ்த்துவர்
வளர்சசிப் பணி நிதிகாண
வழி  வேறு சிந்திப்பீர்.

குடிகாரப் பாவிகளால்
குடும்பங்கள் வாடுது.
விடியலைப் பாராமல்
வேரோடு  மடியுது.
ஒழித்திடுங்கள மதுவினை
உளமாற வாழ்த்துவர்..



கொ.பெ.பி.அய்யா
மது மரணத் தூது !

மதுவேண்டாம் மதுவேண்டாம் மனிதனே!
மதுவேண்டாம் மதுவேண்டாம் மறந்திடு!
மரணம்தான் மரணம்தான் மதுவாலே!
மரணம்தான் மரணம்தான் குடிக்காதே!

அய்யய்யோ அய்யய்யோ உயிர்போகுமே!
அய்யய்யோ அய்யய்யோ உறவழுமே!
பொய்யில்லை பொய்யில்லை நிசமாகுமே!
பொய்யில்லை பொய்யில்லை எழுத்ததுமே!

குடிக்கிறாய் குடிக்கிறாய் விசந்தானுமே!
குடிக்கிறாய் குடிக்கிறாய் நிதம்தானுமே!
துடிக்கிறாய் துடிக்கிறாய் உனக்குள்ளயே!
துடிக்கிறாய் துடிக்கிறாய் பிணமாகவே!

கரைக்குதே கரைக்குதே உனைக்கொல்லவே!
கரைக்குதே கரைக்குதே குழிதள்ளவே!
மறைக்குதே மறைக்குதே நிலை எண்ணவே!
மறைக்குதே மறைக்குதே உடல் தின்னவே!

அழிஞ்சதே அழிஞ்சதே குடும்பம் அழிஞ்சதே!
அழிஞ்சதே அழிஞ்சதே குணமும் அழிஞ்சதே!
தொலைஞ்சதே தொலைஞ்சதே நாணம் தொலைஞ்சதே!
தொலைஞ்சதே தொலைஞ்சதே மானம் தொலைஞ்சதே!

போகுதே போகுதே நலம் போகுதே!
போகுதே போகுதே வளம் போகுதே!
போகுதே போகுதே உரம் போகுதே!
போகுதே போகுதே உயிர் போகுதே!

வேகுதே வேகுதே சுகம் வேகுதே!
வேகுதே வேகுதே அகம் வேகுதே!
வேகுதே வேகுதே கடன் வேகுதே!
வேகுதே வேகுதே உடல் வேகுதே!

ஆகுதே ஆகுதே நாள் ஆகுதே!
ஆகுதே ஆகுதே பாழ் ஆகுதே!
ஆகுதே ஆகுதே எமன் ஆகுதே
ஆகுதே ஆகுதே முடிவாகுதே!

கொ.பெ.பி.அய்யா.



மதுக்கூடம் மட்டும் அல்ல!

மது மது எனச்சொல்லும் சொல்லில்
மயக்கம் விழிக்கிறதோ!
அது அது எனத் துள்ளும் துள்ளில்
ஆசை இழுக்கிறதோ!

ஞானிகள் குழுமும் ஞான சபையோ
நானே அசந்தேனே!
தானாய் உதிர்ந்திடும் தத்துவ மொழியோ!
வீணாய் சிந்தியன`!

சொல்லுக்கும் செயலுக்கும் சொந்தம் பகைக்கும்
சூனியம் மதுதானோ!
மல்லும் மௌனமும் எல்லாம் நானென
வில்லனும் மதுதானோ!

கவிகள் கதைகள் அறிவியல் புதிர்கள்
அவியல் தீஞ்சிடுமே!
பரிவு பாசம் உருகும் நட்பும்
மருகி மாஞ்சிடுமே!

இளமை இந்தியா மறைவினில் ஆடி
வறுமை மறந்திடுமே!
முதுமை கூட இளமை தேடி
மதுவில் பறந்திடுமே!

வேற்றுமை துறந்த ஒற்றுமை மனிதம்
விளையும் கூடமிதோ!
ஆற்றும் காற்றில் தோற்றே ஓடும்
தூற்றும் பாடமிதோ!

மதுவில் தட்டும் அதிர்வில் கொட்டும்
மனதும் திறந்திடுமோ!
அடக்கிய வலிகள் அனைத்தும் கரைந்தும்
அதுவாய் பழகிடுமோ!

மெதுவாய் சுகமாய் பதமாய் கொல்லும்
மதுவே விசந்தானோ!
அதுவாய் இதுவாய் எதுவாய் வெல்லும்
அழிப்பதும் மதுதானோ!

மனிதம் தொலைத்து மனிதம்  பேசும்
மதுக்கூடம் மட்டுமல்ல.
முழுதாய் தொலைந்து முடிவைத் தேடும்
மரணக்கூடம் நில்லு!



கொ.பெ.பி.அய்யா.
தேனானது வீணானது.

தேனான வாழ்வு வீணாத்தான் போமோ!
தெருவே கதிதானோ!
ஆணான நானும் கூனானேன் தானே!
அறிவை இழந்தேனே!

சேராத சேர்க்கை சேர்ந்திருந்தேனே!
சிறுமை அடைந்தேனே!
தேறாத போக்கை தேர்ந்திருந்தேனே!
தெருநாய் ஆனேனே!

சண்டாளர் கூடும் சாராயக் கடையே
சொந்தம் கொண்டேனே!!
கொண்டாளை மறந்தும் கண்டாளை அலைந்தும்
கதையில் தொலைந்தேனே!

பொழுதை தொலைக்கும் புறம்போக்கு நீசர்
புறக்கடை கிடந்தேனோ!
அழுத புள்ளையின் பாலைக் கெடுத்து
ஆட்டத்தில் கொடுத்தேனே!

உறவுகள் பதுங்கி தனிமையில் பிதுங்கி
உணர்வுகள் சுமந்தேனே!
வெறுமையின் வலியை தாங்க மயங்கி
மதுவில் விழுந்தேனே!

உழைப்பதை விட்டு தொலைப்பதைத் தொட்டு
உதிரம் காய்ந்தேனே!
அலைகளில் பட்டு கரையினில் ஒதுங்கி
அடங்கி ஓய்ந்தேனே!

காக்கை கழுகுகள் காலம் பார்த்துக்
காத்துக் கிடக்கின்றன!
போக்கைத் தேடி பாவி உயிரும்
பறக்கத் துடிக்கிறதே!

 கொ.பெ.பி.அய்யா.