Tuesday, 4 March 2014


புறிகிறதா தாய்மனசு?

எதிர் காலம் என்று உன்னை
இதயம் சுமந்தேன் கண்ணே
கனவே மகனே என் மகனே!

உன்னை ஈன்றிடும் போது—கொண்ட
உவகையில் நான் உயிர்த்து.
உலகில் வாழ்கிறேன் என் உறவே!
நான் வாழ்வதன் அர்த்தமே!
நீ வாழ்வதைக் காண்பதே.
.(எதிர்)
காலம் கைகூட நாலும் நீ தேட
வளரும் கல்வி பெறவே
நாளும் நானும் உயிர்க்கிறேன்  
கேளு அன்பு மகனே!

தாயின் மனம் போலும் நின்று வாழ
சேயின் வளம்காண என் நாளில்
நான் உன் நலம் நோக்கி இருக் கிறேன்
வாழ்வும் இனிநீயே மகனே!
கெடும் குடி காரன் ஆக மாறி\
படு வதுமேன் கூறு மகனே!
.(எதிர்)
உயிரின் உயிராக உனையே நினைவாக
உணரந்தேன் நானும் பாவி`
பிறப்பின் பயனாக வாழ்வின் சுகமாக
தொடர்ந்தேன் நானும் உயிரே!
பாவம் நினைக்காத அன்னை மனமே
பார்த்துத் துடிக்கிறேன் தினமே.
ஆடிக் கிடந்தாலும் பிள்ளை தானென
அதுவாய் அழுகுது தேடியே!
அன்பு மகனே ஆசை வரமே
அழிக்கும் குடியும் ஏனடா?


கொ.பெ.பி.அய்யா.



Saturday, 1 March 2014

பாவக்கணக்கு.

நான் சொல்லியழுதிடாத சொந்தக் கதை கேளு
நான் எண்ணி உறங்கிடாத அந்தக் கதை கேளு-இங்க
சொந்தமென்ன பந்தமென்ன ஒண்ணுமில்லையே
என் தாயே தெய்வமே!—அவள்
சொன்னாள் கேக்கலயே!

அத எழுத்தாலே சொல்லி அழுதா
அந்த எழுத்துக்கும் உயிர் வருமே!
ஒரு பாட்டாலே எழுதிப் படிச்சா
அடப் பாட்டுங் கூடக் கூடி அழுமே!!
அந்தப் பாவம் மறக்க நான் பாட்டுப் படிக்க
எந்தப் பாவி மனசும் நொந்து துடிக்கும்.
இதக் கேட்டுத் திருந்த ஒரு ஆளு இருந்தா
செஞ்ச பாவம் தீரும் எனக்கு.
தாயி சொல்லத் தூக்கி எறிஞ்சேன்
அய்யோ குடியாலே கெட்டு அழிஞ்சேன்

நான் ஆகாரம் இல்லா அங்கே போற நேரம்`
நான் ஊரோடும் சேர உறவு ரொம்பத் தூரம்.
என் உடம்பக்கூட தூக்கிச் சுமக்க ஊக்கமில்லையே.
அப்போத் திமிரு கேளாது.
இப்போ அழுதாத் தீராது

தரையில நான் படுத்திருந்தா தாய் மனசு கேளாது
தலையணயும் மறந்திருந்தா தன்மடியத் தந்திடுவாள்.
உண்ணாமப் படுத்துவிட்டா ஊட்டிவிட்டு தூங்கவப்பாள்.
இந்தப் பாவியால அந்தத் தாயுந்தான்
என்ன விட்டுந்தான்  போய் மறஞ்சாளே!
நான் தின்னாத பண்டமும் இல்ல
நான் பண்ணாத சேட்டையும் இல்ல
நான் போடாத சட்டையும் இல்ல
நான் ஆடாத ஆட்டமும் இல்ல
சேறு தண்ணி இப்போ மெத்தை இருக்கு
நாறத் தண்ணி இப்போ சோறு எனக்கு.
பேரு தொலஞ்ச குடிகாரன் எனக்கு.
அந்தத் தேரு ஏறவும் என்ன இருக்கு.
நான் பாடுகிறேன் பாட்டு உனக்கு
சாமி குடிக்காதே நானே கணக்கு.

கொ.பெ.பி.அய்யா.